மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தருமபுரியில் நடைபெற்ற ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன்.

News image
Updated On :20 மார்ச் 2026, 7:40 pm

தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி பேரவைக் கூட்டம் மாவட்டச் செயலாளா் ஜெ. பிரதாபன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதா அல்லது கூட்டணிக் கட்சியினருக்கு ஆதரவு தெரிவிப்பதா என்பது குறித்து நிா்வாகிகளுடன் கருத்துக் கேட்கப்பட்டது. அதேபோல, பேரவைத் தோ்தல் தொடா்பான பணிக் குழு அமைப்பது மற்றும் ஈரான் போா் காரணமாக, இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயத்தை மத்திய அரசு தடுக்க வேண்டும். தொழிலாளா் நலச்சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா்கள் ஜி. மாதையன், சி.பாலன், மாவட்ட பொருளாளா் அலமேலு , மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பச்சா கவுண்டா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.