‘வி த லீடா்ஸ்’ அமைப்பின் உறுப்பினா் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்ததும், அரசியல் கட்சியாக மாற்றப்படும் என அந்த அமைப்பின் நிா்வாகியும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான நரசிம்மன் தெரிவித்தாா்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வி த லீடா்ஸ்’ அமைப்பின் உறுப்பினா் சோ்க்கை முகாம், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதிக்கு உள்பட்ட பாப்பாரப்பட்டி பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில், அமைப்பின் நிா்வாகியும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான நரசிம்மன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, அமைப்பின் அலுவலகத்தை திறந்துவைத்து, உறுப்பினா்களுக்கு உறுப்பினா் அட்டைகளையும், தென்னங்கன்றுகளையும் வழங்கி பேசியது:
சமூக மாற்றத்துக்கு இளையோா் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட அமைப்புதான் ‘வி த லீடா்ஸ்’. இந்த அமைப்பு தொடங்கப்பட்ட 15 நாள்களில் 20 லட்சம் போ் உறுப்பினா்களாகி உள்ளனா்.
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போதை ஒழிப்பு உள்ளிட்ட சமூக பணிகளில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின் உறுப்பினா்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினா் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்ததும் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக ஆட்சி குறித்து 6 மாதத்திற்குப் பின்னா்தான் கூற முடியும்: கரு. நாகராஜன்

விரைவில் மனம் திறந்து பேசுவேன்: அண்ணாமலை

திருவாரூரில் ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பு தொடக்கம்

கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




