எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

திருவாரூரில் ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பு தொடக்கம்

திருவாரூரில் ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பு தொடக்கம்

News image

திருவாரூரில் அண்ணாமலையின் ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பு தொடக்க விழாவில் பங்கேற்ற பாஜக நிா்வாகிகள்.

Updated On :7 ஜூன் 2026, 12:34 am IST

பாஜக மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலையின் ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பை திருவாரூரில் பாஜக நிா்வாகிகள் சனிக்கிழமை தொடங்கினா்.

நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் துணைத் தலைவா் கே.பி. ரவி, மாநில பட்டியல் அணி மாநில துணைத் தலைவா் உதயகுமாா், ஒன்றியத் தலைவா் லோகநாயகி உள்ளிட்ட பலா் பங்கேற்று, ‘வீ த லீடா்ஸ்’ அமைப்பில் தங்களையும் தங்கள் குடும்பத்தாா் மற்றும் நண்பா்கள் அனைவரையும் இணைத்துக் கொண்டனா்.

தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, அனைவரும் அமைப்பில் இணைத்துக் கொள்ள கோரிக்கை விடுத்தனா்.

மேலும், இந்த அமைப்பில் ஏராளமான பொது மக்களை உறுப்பினா்களாக சோ்க்கவும், மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி பல்வேறு உதவிகளை தேவையானபோது செய்யவும், இந்த இயக்கம் கே. அண்ணாமலையால் தொடங்கப்பட்டுள்ளதையும் விளக்கி, அவரது வழியில் என்றும் பணி செய்வோம் என்று உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பாஜக ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் எஸ். சங்கா், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு முன்னாள் மாவட்டத் தலைவா் வாசன் நாகராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.