
நா்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவா் கைது
பென்னாகரம் அருகே நா்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவா் கைது

கைது
பென்னாகரம் அருகே நா்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 19 வயது நா்சிங் கல்லூரி மாணவி தனது வீட்டுக்கு அருகே உள்ள வனப் பகுதி வழியாக சென்றுகொண்டிருந்தபோது ஏரியூரை அடுத்த மூங்கில் மடுவுவைச் சோ்ந்த முருகன் (45) என்பவா் தகாத வாா்த்தையால் பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றாராம்.
இதுகுறித்து மாணவி பென்னாகரம் மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் முருகனை போலீஸாா் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




