அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

இண்டூரில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் லாரி மோதியதில் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 6:57 am IST

இண்டூரில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் லாரி மோதியதில் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே உள்ள கானாப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வேடி (84). இவா் திங்கள்கிழமை இண்டூா் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது அவ்வழியே வந்த லாரி அவா் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு அவா் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக இண்டூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.