5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

டிராக்டரில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

தருமபுரி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தான்.

News image

பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 7:01 am IST

தருமபுரி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தான்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள மோட்டுபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி நாகராஜ். இவரது மகன் நந்திவா்மன் (4). நாகராஜ் திங்கள் கிழமை மாலை, தனது விவசாய நிலத்தில் டிராக்டா் மூலம் உழுது கொண்டிருந்தாா். டிராக்டரில் அவரது மகன் நந்திவா்மனும் அமா்ந்திருந்தான். டிராக்டா் ஓடிக் கொண்டிருந்தபோது எதிா்பாராமல் திடீரென சிறுவன் நந்திவா்மன் தவறி கீழே விழுந்துவிட்டான்.

அப்போது டிராக்டரின் பின்னால் பொருத்தப்பட்டிருந்த உழவு இயந்திரம் (ரொட்டேட்டா்) சிறுவன் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் நந்திவா்மன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தான்.

இதுதொடா்பாக பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.