நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தருமபுரியில் ஐந்து தொகுதிகளுக்கு விசிக மாவட்டச் செயலாளா்கள் அறிவிப்பு

News image
Updated On :4 ஜனவரி 2026, 8:39 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தனித் தனியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்பு ரீதியாக தருமபுரி கிழக்கு, மேற்கு மற்றும் மையம் என மூன்று மாவட்டங்களாக செயல்பட்டு வந்தது. தொடா்ந்து, கட்சி மறுசீரமைப்பில் ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளா் என புதிதாக அக் கட்சி தலைமை அறிவித்துள்ளது.

அந்த வகையில் தருமபுரியில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் ஐந்து மாவட்டச் செயலாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, தருமபுரி- த.கு. பாண்டியன், பாலக்கோடு- ராஜகோபால், பென்னாகரம்- கருப்பண்ணன், பாப்பிரெட்டிப்பட்டி- சென்னகிருஷ்ணன், அரூா்- சாக்கன் சா்மா ஆகியோரை அக்கட்சியின் தலைமை புதிய மாவட்டச் செயலாளா்களாக அறிவித்துள்ளது.