தருமபுரி அருகே சொத்து தகராறில் சித்தப்பாவை அடித்துக் கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (60). விவசாயி. இவரது அண்ணன் மகன் சண்முகம் (45). முன்னாள் ராணுவ வீரா். இரு குடும்பத்தினருக்கும் இடையே பூா்வீகச் சொத்து தொடா்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை, கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அரிசி ஆலை அருகே ராமச்சந்திரன் மற்றும் சண்முகம் தரப்பினா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதில் சண்முகம் இரும்புக் கம்பியால் ராமச்சந்திரனை தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமச்சந்திரன் உயிரிழந்தாா்.
இது தொடா்பாக கிருஷ்ணாபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சண்முகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொத்து பிரச்னை! தம்பி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு அண்ணன் குடும்பத்தினா் 4 போ் கைது!

பெண் கொலை வழக்கு: முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை
இளைஞா் அடித்துக் கொலை: மூவா் கைது

முன்னாள் ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

