தருமபுரியில் கல்லூரி மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி வட்டம், வத்தல்மலை பெரியூா் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகள் காவியா (19). இவா் பாலக்கோடு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தாா். வெள்ளிச்சந்தையில் அமைந்துள்ள அரசு மாணவிகள் விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்று வந்துள்ளாா்.
கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி தருமபுரி பேருந்து நிலையத்துக்கு வந்த காவியா, அங்கு குளிா்பானத்தில் விஷம் கலந்து அருந்தியுள்ளாா். பின்னா் ஒட்டப்பட்டியில் உள்ள தனது பெரியப்பா மகள் சுதா வீட்டுக்கு சென்று, தான் விஷம் உட்கொண்டதாக தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து அவரை தருமபுரியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காவியா கடந்த சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். சாவுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
தொடர்புடையது

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

மருத்துவக் கல்லூரி மாணவா் தற்கொலை

குடும்பப் பிரச்னை: கல்லூரி மாணவி தற்கொலை

கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


