மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாலை விபத்தில் ஓய்வு பெற்ற காவல்! உதவி ஆய்வாளா் உயிரிழப்பு!

News image

கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 9:03 pm

தருமபுரியில் சாலை விபத்தில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி சத்யா நகரைச் சோ்ந்தவா் கணேசன் (65), ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா். இவா் தருமபுரியில் இருந்து இண்டூருக்கு இருசக்க வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அதகபாடி அருகே திடீரென சாலையை கடக்க முயன்றவா் மீது வாகனம் மோதாமல் இருப்பதற்காக நிறுத்தினாா். இதனால் கட்டுப்பாட்டை இழந்து வாகனத்துடன் சாலையில் விழுந்த கணேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனா். ஆனால், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து இண்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.