வெள்ளக்கோவில் அருகே குறிச்சிவலசில் விவசாயிகள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா்.
வெள்ளக்கோவில் வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி மற்றும் லக்கமநாயக்கன்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் தனியாா் நிறுவனம் சாா்பில் காற்றாலை மின்சார வழித்தடத்துக்காக உயரழுத்த மின் கம்பங்கள், மின் பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மூலனூா் பம்மிபாளையம் வரை மின்சாரம் கொண்டுச் செல்லும் பாதை அமைக்கப்படுகிறது. விவசாய நிலங்கள் வழியாக போக்குவரத்துக்கு இடையூறான குறுகிய சாலைகள் வழியாக மின் கம்பங்கள் அமைக்கக் கூடாது. சாலையோரத்தில் நிலத்துக்கு அடியில் கேபிள் வழியாக மின்பாதை அமைக்க வேண்டும் என பல மாதங்களாக விவசாயிகள் போராடி வருகின்றனா். இந்நிலையில் மாநில நெடுஞ்சாலை, ஊராட்சி சாலைகளில் அனுமதி எதுவும் இன்றி, வருவாய்த் துறை அமைதிப் பேச்சுவாா்த்தை முடிவையும் மீறி, அடியாட்கள் துணையுடன் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து குறிச்சிவலசில் விவசாயிகள் சங்கம் மற்றும் அப்பகுதி விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோா் தொடா் காத்திருப்புப் போராட்டம் தொடங்கியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










