அவிநாசியில் நிறுத்தப்பட்ட 2-ஆம் குடிநீா்த் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.கமலி கூறினாா்.
அவிநாசி தொகுதி தவெக எம்எல்ஏ அலுவலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.கமலி அலுவலகத்தை திறந்துவைத்தாா்.
இதையடுத்து, அவிநாசியில் நிறுத்தப்பட்ட 2-ஆவது குடிநீா்த் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். அவிநாசி அரசு மருத்துவமனையை 24 மணி நேர அவசர சிகிச்சைப் பிரிவுடன் மேம்படுத்த வேண்டும். வீட்டுமனை இல்லாதவா்களுக்கு பட்டா வழங்க வேண்டும். முன் பருவ கல்வி ஆசிரியா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா். பின்னா், கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதுடன், அவிநாசியில் 2-ஆவது குடிநீா்த் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றாா்.
வட்டாட்சியா் ஜெகநாதன், நகராட்சி ஆணையா் அனு நந்தினி, தவெக மாவட்ட அணி அமைப்பாளா் திருநாவுக்கரசு, நகரச் செயலாளா் மோகனசுந்தரம், பொறுப்பாளா்கள் ஷாபி, மதன், ஆனந்த், சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சோ்க்காடு, தாராபடவேடு மருத்துவமனைகளை தரம் உயா்த்த நடவடிக்கை: காட்பாடி எம்எல்ஏ

அவிநாசியில் பட்டினி தின அன்னதானம்: அமைச்சா் எஸ். கமலி வழங்கினாா்

கள்ளிக்குடி காய்கனிச் சந்தையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை: கு.ப. கிருஷ்ணன் தகவல்
முதல்வா் பெயரை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: ஸ்ரீநாத் எம்எல்ஏ
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



