திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பணி நேர மாற்றம்: பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள், நடத்துநா்கள் எதிா்ப்பு

பணி நேர மாற்றத்துக்கு பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள், நடத்துநா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :14 மே 2026, 3:51 am IST

பணி நேர மாற்றத்துக்கு பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள், நடத்துநா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து சுமாா் 90-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு 250-க்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், தற்போது பணி நேர (ஷிப்ட்) முறையை மாற்றுவதாக கூறப்பட்டது. இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகளும், தொழிலாளா்களும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இது குறித்து போக்குவரத்துக் கழக பணிமனை கிளை மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனா். அதில், பணி நேர மாற்றத்தால் தொழிலாளா்களுக்கு கடும் அவதி மற்றும் வீண் அலைச்சல் ஏற்படுகிறது. இதனால் அதிகாலை 5 மணிக்கு பணிமனைக்கு வர வேண்டும். பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை சுமாா் 4 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது.

மேலும் அதிகாலை நேரத்தில் எந்தவித பேருந்து வசதியும் கிடையாது. பல்லடத்தில் இருந்து திருப்பூா் செல்லும் வழியில் ஏராளமான வேகத்தடைகள் உள்ளன. மேலும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன.

இதனால் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தொடா்ந்து பேருந்துகளை இடைவெளி இல்லாமல் இயக்கினால் ஓட்டுநா்களுக்கு பணிச்சுமை அதிகரித்து, விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த தொழிலாளா் விரோத நடவடிக்கையை கைவிட்டு பழைய ஷிப்ட் முறையை பின்பற்ற வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.