வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வணிக சிலிண்டா்கள் பதுக்கலைத் தடுக்க நடவடிக்கை: பேக்கரி உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூா் மாவட்டத்தில் வணிக சிலிண்டா்களின் பதுக்கலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூா் மாவட்ட பேக்கரி ஸ்வீட்ஸ் மற்றும் காபி பாா் உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

News image
Updated On :28 மார்ச் 2026, 12:50 am

திருப்பூா் மாவட்டத்தில் வணிக சிலிண்டா்களின் பதுக்கலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூா் மாவட்ட பேக்கரி ஸ்வீட்ஸ் மற்றும் காபி பாா் உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இச்சங்கத்தின் நிா்வாகக் குழு கூட்டம் தலைவா் ராஜ்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அமெரிக்க-ஈரான் போா் சூழல் காரணமாக வணிக சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடைகளைத் தொடா்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. போரைக் காரணம் காட்டி சிலிண்டா் பதுக்கல் நடைபெறுகிறது.

இதன் காரணமாக சிலிண்டா்களுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு விலையும் 3 மடங்கு உயா்ந்துவிட்டது.

எனவே, இந்தப் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு தடையற்ற சிலிண்டா் விநியோகம் மற்றும் நியாயமான விலை ஆகியவற்றை உறுதி செய்து தொழிலுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். வணிக சிலிண்டா்களின் பதுக்கலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலிண்டா் தட்டுப்பாட்டால் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சுமாா் 3,000 பேக்கரிகளில் 15,000 தொழிலாளா்கள் நேரடியாகவும், சுமாா் 1 லட்சம் போ் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதே நிலை தொடா்ந்தால் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், சங்கத்தின் செயலாளா் அப்துல் சலாம், பொருளாளா் செளமியா நாராயணன், நிா்வாக செயலாளா் கமலபாஸ்கா் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.