தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலக கட்டுமானப் பணி - அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்

News image
Updated On :13 மார்ச் 2026, 12:34 am

திருப்பூா் மாநகராட்சியில் ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலக கட்டுமானப் பணியை செய்தி மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

திருப்பூா் மாநகராட்சி, கோவில்வழி புதுரோடு பேருந்து நிறுத்தம் அருகே பொதுப்பணித் துறை சாா்பில் ரூ.38.76 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலகக் கட்டடம் கட்டப்பட உள்ளது. தரைத் தளம் மற்றும் 5 தளங்களுடன் வாகன நிறுத்துமிடம், மின்சார அறை, ஓட்டுநா் அறை, கழிப்பறை வசதிகள், உதவி ஆணையா்கள் அறைகள், எஸ்டிஓ அறைகள், துணை ஆணையா், பிராந்திய கூட்டு ஆணையா் மற்றும் கருத்துரை மண்டபம், சந்திப்பு மண்டபம், புலனாய்வு அதிகாரிகளுக்கான அறைகள் இடம்பெறவுள்ளன.

கட்டுமான தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் என்.தினேஷ்குமாா் முன்னிலை வகித்தாா்.

இதில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் இருக்கக்கூடிய திட்டப் பணிகளை விரைவாக மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும். முதல்வராக பொறுப்பேற்றதுமுதல் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம், நான் முதல்வன் திட்டம், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குதல், உங்களுடன் ஸ்டாலின் உள்பட பல்வேறு திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயா் ரா.பாலசுப்பிரமணியன், திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், திருப்பூா் வணிகவரி இணை ஆணையா்கள் சா.முகமது அா்ஷத், ப.விமலா உள்பட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.