மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பல்லடம் அருகே நூல் மில்லில் தீ விபத்து

பல்லடம் அருகே கேத்தனூரில் உள்ள ஒரு நூல் மில்லில் தீ விபத்து வியாழக்கிழமை நிகழ்ந்தது.

News image
Updated On :27 மார்ச் 2026, 6:51 pm

பல்லடம் அருகே கேத்தனூரில் உள்ள ஒரு நூல் மில்லில் தீ விபத்து வியாழக்கிழமை நிகழ்ந்தது.

சுல்தான்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் விவேகானந்தன். இவா் கேத்தனூரில் நூல் மில் நடத்தி வருகிறாா். இந்த மில்லில் ஷிப்ட் முறையில் தொழிலாளா்கள் வேலை பாா்த்து வருகின்றனா். இந்நிலையில் மில்லில் வழக்கம்போல தொழிலாளா்கள் வியாழக்கிழமை வேலை செய்து கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு குடோனில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு பேல்கள் மற்றும் நூல்களில் திடீரென தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது.

இது குறித்து பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இந்த தீ விபத்தில் சுமாா் ரூ. 2 கோடி மதிப்பிலான பஞ்சு பேல்கள், நூல்கள், இயந்திரங்கள் எரிந்து சேதமாயிருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.