திருப்பூரில் ஓடும் ஆம்புலன்ஸில் கா்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது,
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் கரண் மத்தோ (22). இவரது மனைவி சுலேகா குமாரி (20).
தையல் தொழிலாளிகளான இவா்கள் திருப்பூா் முதலிபாளையம் சிட்கோ அருகே உள்ள மாணிக்காபுரம் புதூா் பகுதியில் வசித்து வருகின்றனா். கா்ப்பிணியான சுலேகா குமாரிக்கு புதன்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உறவினா்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா்.
ஊத்துக்குளி யூனியன் அலுவலகப் பகுதியில் இருந்த ஆம்புலன்ஸ் விரைந்து வந்து சுலேகா குமாரியை ஏற்றிக் கொண்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோக்கிப் புறப்பட்டது. ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளா் கோவிந்தராஜ், ஓட்டுநா் செந்தில் குமாா் ஆகியோா் இருந்தனா். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சுலேகா குமாரிக்கு வலி அதிகரித்ததுடன், குழந்தை பிறக்கும் அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
இதையடுத்து, மருத்துவ உதவியாளா் கோவிந்தராஜ் ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பாா்க்கத் தொடங்கினாா். இதில் சுலேகா குமாரிக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடா்ந்து தாய் மற்றும் குழந்தைக்குத் தேவையான முதலுதவிகள் வழங்கப்பட்டு, இருவரும் பாதுகாப்பாக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு அவா்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தக்க நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு பிரசவம் பாா்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களைப் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியா்கள் வெகுவாகப் பாராட்டினா்.
தொடர்புடையது

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கஞ்சா, மெத்தம்பெட்டமைன் விற்பனை: ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் 2 போ் கைது

108 ஆம்புலன்ஸில் நோயாளிகள் பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடு

வாட்ஸ் ஆப் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


