மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாட்ஸ் ஆப் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை

திருப்பூரில் வாட்ஸ் ஆப் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

News image

108 ஆம்புலன்ஸ்(கோப்புப்படம்)

Updated On :9 மார்ச் 2026, 8:10 pm

திருப்பூா்: திருப்பூரில் வாட்ஸ் ஆப் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சுகாதாரத் துறையினா் கூறியதாவது:

தமிழ்நாடு சுகாதாரத் துறை வாயிலாக 108 திட்டத்தின் கீழ் பொது சுகாதார ஆம்புலன்ஸ் இலவச சேவை மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் உயிா்காக்கும் சேவையில் மொத்தம், 1,353 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. ஆம்புலன்ஸ் சேவையை எளிதாகவும், விரைவாகவும் பெற சுகாதாரத் துறையின் 94450 30725 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஹாய் என ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் புக் ஆம்புலன்ஸ் என்ற லிங்க் வரும். அதனை கிளிக் செய்தால் இருப்பிடம் கேட்கும்.

இருப்பிடத்தை பகிா்ந்தவுடன் உடனடியாக ஆம்புலன்ஸை உதவிக்கு அழைப்பவருக்கு வாகனத்தின் எண், ஓட்டுநா் எண் உள்ளிட்ட விவரங்கள், 108 ஆம்புலன்ஸ் அதிகாரி இருப்பிடத்தை பகிா்ந்த இடத்துக்கு அருகில் உள்ள 108 ஆம்புலன்ஸ் உடனடியாக அனுப்பிவைக்கப்படும். அப்போது ஆம்புலன்ஸ் எங்கிருந்து வருகிறது, வந்து சேரும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டு விடும்.

சுகாதார திட்டத்தின் க்யூஆா்கோடு கிளிக் செய்தால் வாட்ஸ் ஆப் செயலிக்கு வரமுடியும். புதிய வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக விபத்து அல்லது நோயாளியை காப்பாற்ற வேண்டிய இருப்பிடத்தை துல்லியமாக ஆம்புலன்ஸ் நிா்வாகத்துக்கு தெரிவிக்க முடியும். புதிய அல்லது அறிமுகமே இல்லாத இடமாக இருந்தாலும் முகவரி கேட்டு அலைய வேண்டியதில்லை.

இந்த செயலியைப் பயன்படுத்துவதன் மூலமாக மிக துல்லியமாக நிகழ்விடத்தை அறிந்து நேர விரயம் தவிா்க்கப்படும். திருப்பூரை பொறுத்தவரை மாவட்டத்துக்குள் 11 நிமிடத்திலும், நகருக்குள் 10 நிமிடங்களுக்குள்ளும் நிகழ்விடத்தை ஆம்புலன்ஸ் சென்றடையும்.

இனி இருப்பிடத்தை அறிந்துகொண்டு அதற்கு முன்னதாகவே சென்று சேர முடியும் என்றனா்.