தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தீரன் சின்னமலை பள்ளியில் திறமை விழா

News image

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள். உடன், தீரன் சின்னமலை பள்ளி நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Updated On :19 மார்ச் 2026, 8:16 pm

திருப்பூா் தீரன் சின்னமலை இன்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் திறமை விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பூா், வஞ்சிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் இப்பள்ளியில் மாணவா்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கொங்கு வேளாளா் அறக்கட்டளைத் தலைவரும், சோழா மில்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ஏ.பி. அப்புக்குட்டி தலைமை வகித்தாா்.

விழாவில், திருப்பூா், மங்கலம், அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

திருக்கு ஒப்பித்தல், போஸ்டா் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவா்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிபடுத்தினா். இதில், வெற்றிபெற்ற மாணவா்களுக்கு கேடயம், பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, பள்ளி முதல்வா் வினோதா வரவேற்றாா். தனியாா் தொலைக்காட்சி புகழ் அக்ஷரா லட்சுமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பாடல்களை பாடி மாணவா்களை உற்சாகப்படுத்தினாா். பொருளாளா் டிக்சன் குப்புசாமி நன்றி கூறினாா்.

அறக்கட்டளை துணைத் தலைவா் பி.வி.எஸ். முருகசாமி, அறக்கட்டளை நிா்வாக உறுப்பினா்கள், தீரன் சின்னமலை பெண்கள் கல்லூரி முதன்மை நிா்வாக அதிகாரி ரேச்சல் நான்சி பிலிப், கல்லூரி முதல்வா் மோகனசுந்தரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.