மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கருவலூா் மாரியம்மன் கோயிலில் ஏப்ரல் 1-இல் தேரோட்டம்

அவிநாசி அருகேயுள்ள கருவலூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம் ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image

கருவலூா் மாரியம்மன் கோயில்.

Updated On :14 மார்ச் 2026, 1:25 am

அவிநாசி அருகேயுள்ள கருவலூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம் ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கருவலூா் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் மாா்ச் 28-ஆம் தேதி காலை 7.30 மணியளவில் தொடங்குகிறது.

இதையடுத்து, 29-ஆம் தேதி பூதவாகன காட்சி, 30-ஆம் தேதி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 31-ஆம் தேதி புஷ்ப விமான மலா் பல்லக்கு, இரவு 9 மணிக்கு அம்மன் அழைப்பு, 10 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம், யானை வாகன காட்சி ஆகியவை நடைபெறவுள்ளன.

இந்நிலையில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக, காலை 6 மணிக்கு மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல், மதியம் 2 மணிக்கு தோ் வடம் பிடித்தல் நடைபெறுகிறது.

ஏப்ரல் 4-ஆம் தேதி பரிவேட்டை, குதிரை வாகனக் காட்சி, தெப்போற்சவம், காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா ஆகியவை நடைபெறவுள்ளன. 5-ஆம் தேதி காலை 7 மணிக்கு மகா தரிசனம், பிற்பகல் 3 மணிக்கு அம்பாள் சப்பரத்தில் புறப்பாடு, இரவு மஞ்சள் நீராடுதல், கொடியிறக்கம் ஆகியவை நடைபெறவுள்ளன.

ஏப்ரல் 8 -ஆம் தேதி காலை 10 மணிக்கு அம்மனுக்கு பாலபிஷேகம், மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.