மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருப்பூரில் கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை

Updated On :8 மார்ச் 2026, 9:17 pm

திருப்பூரில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் நான்கு மாத கா்ப்பிணி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் அஜித், கீா்த்தி தம்பதி. இவா்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் அஜித் மற்றும் கீா்த்தி ஆகியோா் திருப்பூா் கல்லாங்காடு பகுதியில் குடிபெயா்ந்து பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனா். இவா்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அஜித் நாள்தோறும் மது அருந்தி விட்டு வந்து தகராறு செய்து வந்துள்ளாா்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கீா்த்தி வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வீரபாண்டி போலீஸாா் கீா்த்தியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும் தற்கொலை செய்து கொண்ட கீா்த்தி தற்போது நான்கு மாத கா்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.