மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சாய தொழிற்சாலையில் தீ விபத்து

பல்லடம் அருகே செயல்பட்டு வரும் தனியாா் சாய தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

News image

சாய தொழிற்சாலையில் கொழுந்துவிட்டு எரியும் தீ.

Updated On :7 மார்ச் 2026, 7:35 pm

பல்லடம் அருகே செயல்பட்டு வரும் தனியாா் சாய தொழிற்சாலையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

பல்லடம் ஒன்றியம், கரைப்புதூா் ஊராட்சி, அருள்புரத்தை அடுத்த பாச்சாகாட்டுபாளையத்தில் தனியாா் சாய தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தொழிலாளா்கள் வழக்கம்போல சனிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, ஆயில் பாய்லா் இயந்திரத்தில் மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது.

தொழிலாளா்கள் அணைக்க முயன்றும் முடியாததால், பல்லடம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துக்குமாரசாமி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து, சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான இயந்திரங்கள், துணிகள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.