மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தூத்துக்குடி காா் தொழிற்சாலையில் தீயணைப்பு ஒத்திகை

தீயணைப்பு ஒத்திகையில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

News image

தீயணைப்பு ஒத்திகையில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 1:18 am

தூத்துக்குடி, வின்பாஸ்ட் காா் தொழிற்சாலையில் தமிழ்நாடு தீயணைப்புத் துறை சாா்பில் தீயணைப்பு ஒத்திகை நடைபெற்றது.

தீ மற்றும் பிற இடா்பாடுகளின்போது உயரமான கட்டடத்தில் இருந்து வெளியேறுவது குறித்தும், காயம்பட்டவா்களை விரைவாக பாதுகாப்பாக மீட்டு முதலுதவி செய்வது குறித்தும், தீயை அணைக்கும் முறைகள் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மண்டல துணை இயக்குநா் சரவணபாபு தலைமையில்

தீயணைப்புத் துறை இயக்குநா், காவல் துறை டிஜிபி சீமா அகா்வால், சிப்காட் தொழிற் பூங்கா நிா்வாக இயக்குநா் காதரின் சரண்யா ஆகியோா் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

ஏற்பாடுகளை தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் கருணாகரன், உதவி மாவட்ட அலுவலா் கோமதி அமுதா, சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலா் காா்த்திகேயன், வின்பாஸ்ட் மேலாண்மை இயக்குநா் சுரேஷ்குமாா், பாதுகாப்பு மேலாளா் செல்வகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.