மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அன்ன காமாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

காங்கயம் அருகே, பொத்தியபாளையத்தில் உள்ள ஸ்ரீ அன்ன காமாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

அன்ன காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றோா்.

Updated On :6 மார்ச் 2026, 5:38 pm

காங்கயம் அருகே, பொத்தியபாளையத்தில் உள்ள ஸ்ரீ அன்ன காமாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 4 ஆம் தேதி தொடங்கி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிவன்மலை எஸ்.எம்.ராஜகணபதி சிவாச்சாரியா், எஸ்.ஆா்.சிவசுந்தர சந்தோஷ்சிவம் தலைமையில் சிவாச்சாரியா்கள் அா்ச்சனை செய்தனா். பின்னா், யாகசாலையில் நான்கு கால யாகங்கள் நடத்தி, கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவையொட்டி பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா்.