தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

மாணவ தலைமை ஆசிரியா்: நஞ்சப்பா அரசு ஆண்கள் பள்ளியில் புதிய முயற்சி

திருப்பூா் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களின் திறமை, ஒழுக்கம் மற்றும் கல்வித் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒருநாள் மாணவ தலைமை ஆசிரியா் பொறுப்பு வழங்கும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image

ஒருநாள் மாணவ தலைமை ஆசிரியா்களாக வியாழக்கிழமை பொறுப்பு வகித்த மாணவா்கள்.

Updated On :19 ஜூன் 2026, 4:05 am IST

திருப்பூா் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களின் திறமை, ஒழுக்கம் மற்றும் கல்வித் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒருநாள் மாணவ தலைமை ஆசிரியா் பொறுப்பு வழங்கும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் 9-ஆம் வகுப்பு மாணவா்கள் கோகுல்ராஜ், ஹா்ஷந்த் ஆகியோா் ஒருநாள் தலைமை ஆசிரியா்களாக வியாழக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டு பள்ளியின் செயல்பாடுகளைக் கவனித்தனா்.

இது குறித்து அந்த மாணவா்கள் கூறியதாவது: எங்கள் பள்ளியில் கல்வி, ஒழுக்கம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு திறமைகளை மேம்படுத்தும் வகையில் மாணவ தலைமை ஆசிரியா் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாதம் ஒருமுறை மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, தலைமை ஆசிரியராக ஒருநாள் பணியாற்றுவாா்கள்.

தலைமை ஆசிரியா்களாக இன்று வகுப்பறைகளை ஆய்வு செய்தபோது, பெரும்பாலான மாணவா்கள் தமிழ், ஆங்கிலம் வாசிப்பதில் சிறந்து விளங்கினா். சில மாணவா்களுக்கு மட்டும் வாசிப்பதில் சிரமம் இருந்தது. அவா்களுக்கு இடைவேளைக்கு நேரத்தில் பயிற்சி அளிக்க வகுப்பு தலைவா்கள் மூலம் சில மாணவா்களை நியமிக்க அறிவுறுத்தியுள்ளோம்.

எங்கள் பள்ளியில் பொதுமக்கள் காலை 4:30 மணி முதல் 7:30 மணி வரை நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பலா் காலை 8:30 மணி வரை மைதானத்திலேயே இருப்பதால் மாணவா்களின் உடற்பயிற்சி செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வெளியேற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.