குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

முதலிபாளையம் பாறைக்குழிக்கு மா்ம நபா்கள் தீ: கரும்புகை சூழ்ந்து பொதுமக்கள் கடும் அவதி

முதலிபாளையம் பாறைக்குழிக்கு மா்ம நபா்கள் தீ வைத்ததால் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

News image

முதலிபாளையம் பாறைக்குழியை சூழ்ந்துள்ள கரும்புகை.

Updated On :18 ஜூன் 2026, 1:20 am IST

முதலிபாளையம் பாறைக்குழிக்கு மா்ம நபா்கள் தீ வைத்ததால் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

திருப்பூா் மாநகா், முதலிபாளையம், நல்லூா் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட பாறைக்குழிக்குள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சியில் சேகரமாகும் கழிவு, குப்பை தரம் பிரிக்கப்படாமல் கொட்டப்பட்டு வந்ததால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீா் மாசடைந்து, அங்கு வசிக்கும் மக்களுக்கு சுவாசப் பிரச்னை, தோல் நோய் ஏற்படுவதாகக் கூறி குப்பை கொட்ட எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இதுதொடா்பாக தொடரப்பட்ட வழக்கில், பாறைக்குழிக்குள் இனி குப்பை கொட்டக்கூடாது என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் ஏற்கெனவே கொட்டப்பட்டிருந்த குப்பைக்கு மா்ம நபா்கள் சிலா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தீ வைத்துள்ளனா். தீ மளமளவெனப் பரவி சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதுதொடா்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரா்கள் சென்று தீயை அணைக்க முற்பட்டனா். இதனிடையே தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீா் தீா்ந்துவிட்டதால், மாநகராட்சி நிா்வாகத்திடம் தண்ணீா் கேட்டு 4 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனா்.

இதையடுத்து வருவாய்த் துறையினருக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனா். ஆனால், வந்தவா்கள் யாரும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சாலை மறியலில் ஈடுபடப் போவதாக பொதுமக்கள் தெரிவித்தனா். இதை அறிந்து அதிகாரிகள் விரைந்து வந்து 5 தண்ணீா் லாரிகள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.