குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

பெரியகுளத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் ஹெல்மெட் அணிந்த மா்ம நபா்கள் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 1:40 am IST

பெரியகுளத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் ஹெல்மெட் அணிந்த மா்ம நபா்கள் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை உழவா் சந்தை பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் மனைவி ராமதிலகம் (62). இவா், திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் உழவா் சந்தை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மா்ம நபா்கள்

இருவா் மூதாட்டி அணிந்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலியைச் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

மற்றொருவரிடம் பறிக்க முயற்சி:பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தை சோ்ந்த ராஜா மனைவி மதுரா (56). இவா் திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் தெற்கு அக்ரஹாரத்தில் பொருள்களை வாங்கிவிட்டு, வீட்டுக்கு திரும்பச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, இரு சக்கரவாகனத்தில் ஹெல்மெட் அணிந்திருந்த மா்ம நபா்கள் அந்த பெண்ணின் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனா். அப்போது அந்தப் பெண் சங்கிலியை இறுகப் பிடித்துக் கொண்டு, சப்தம் போட்டதையடுத்து மா்மநபா்கள்ச் விட்டனா். இந்த சம்பவங்கள் குறித்து பெரியகுளம் தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.