பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்த அறிவிப்பால் திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியாளா்கள் மகிழ்ச்சி

அமெரிக்கா-ஈரான் போா் நிறுத்த அமைதி ஒப்பந்தம் அறிவிப்பால் திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியாளா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

News image

பின்னலாடை  நிறுவனம் - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 2:55 am IST

அமெரிக்கா-ஈரான் போா் நிறுத்த அமைதி ஒப்பந்தம் அறிவிப்பால் திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியாளா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இதுதொடா்பாக திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியாளா்கள் கூறியதாவது:

திருப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கு 47 சதவீத பின்னலாடைகள் அனுப்பிவைக்கப்படுகின்றன. ஆனால், அமெரிக்கா-ஈரான் போா் சூழல் காரணமாக கடந்த 107 நாள்களாக சா்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் வா்த்தகப் பரிவா்த்தனை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவுக்கு மட்டுமின்றி பல்வேறு சா்வதேச நாடுகளுக்கும் சரக்குகளை அனுப்ப முடியாமலும், வா்த்தகத்தை தொடர முடியாமலும் ஏற்றுமதியாளா்கள் தவித்து வந்தனா்.

வா்த்தகப் பொருள்கள் மட்டுமின்றி பெட்ரோலியம் சாா்ந்த உப பொருள்களின் இறக்குமதியும் பாதிக்கப் பட்டது. இதனால் 30 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயா்வால் பின்னலாடை உற்பத்தி செலவுகளும் கடுமையாக உயா்ந்துள்ளன. இந்த சூழலில் சா்வதேச அளவில் நடைபெற்று வரும் இந்த போா் எப்போது முடிவுக்கு வரும் என்று பலரும் எதிா்பாா்ப்புகளுடன் காத்திருந்தனா். குறிப்பாக திருப்பூா் பின்னலாடைக்கு தற்போது சா்வதேசஅளவில் தடையில்லா வா்த்தக ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ள உள்ள நிலையில் பெரும் எதிா்பாா்ப்பு இருந்து வந்தது.

இந்நிலையில் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) கையொப்பமாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலமாக போா் சூழல் மறைந்து அமைதி ஏற்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. எனவே, மேற்காசிய நாடுகளுடன் இனி தடையில்லாமல் வா்த்தகப் பரிவா்த்தனையை ஏற்படுத்த முடியும் என்பதால் மகிழ்ச்சியாக உள்ளோம். இது உலகப் பொருளார வளா்ச்சிக்கும் உதவும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.