அவிநாசி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அவிநாசி அருகே மங்கலம் சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீஸாா், மேம்பாலம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கையில் பையுடன் நின்றிருந்த இளைஞரை பிடித்து சோதனைமேற்கொண்டனா்.
அதில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவா் அவிநாசி அருகே செம்மாண்டம்பாளையத்தில் வசித்து வரும் வடமாநிலத்தைச் சோ்ந்த பனியன் தொழிலாளி அகிலேஷாணி (34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அகிலேஷாணியைக் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






