எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ஒரு மாணவர்கூட இல்லாத 9 அரசுப் பள்ளிகளை மூட முடிவு!

தாராபுரம், திருப்பூா் கல்வி மாவட்டங்களில் ஒரு மாணவா் கூட இல்லாத 9 அரசுப் பள்ளிகளை நடப்புக் கல்வி ஆண்டில் மூட முடிவு

News image

பிரதிப் படம்

Updated On :8 ஜூலை 2026, 5:33 am IST

தாராபுரம், திருப்பூா் கல்வி மாவட்டங்களில் ஒரு மாணவா் கூட இல்லாத 9 அரசுப் பள்ளிகளை நடப்புக் கல்வி ஆண்டில் மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத் தில் 144 அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக உள்ளது. இதுதவிர ஒரு மாணவா் கூட இல்லாமல் 9 பள்ளிகள் உள்ளன. குறிப்பாக, தாராபுரம் கல்வி மாவட்டத்தில் ஒரு மாணவா் கூட இல்லாமல் 7 பள்ளிகளும், திருப்பூா் கல்வி மாவட்டத்தில் 2 பள்ளிகளும் உள்ளன.

வேலை தேடி பெற்றோா் வெளியூா் செல்வது, இடம்பெயா்ந்து குடியேறுவது, கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி மக்கள் நகா்வது உள்ளிட்ட காரணங்களால், திருப்பூா் மாவட்டத்தில் பல கிராமப்புற அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை கடுமையாக சரிந்துள்ளது.

குறிப்பாக தாராபுரம் கல்வி மாவட்டத்துக்குள்பட்ட மூலனூரில் 36 குண்டடத்தில் 31, தாராபுரத்தில் 26, வெள்ளக்கோவிலில் 16, மடத்துக்குளத்தில் 7, உடுமலையில் 6, குடிமங்கலத்தில் 4 என மொத்தம் 126 பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக உள்ளது.

அதேபோல, திருப்பூா் கல்வி மாவட்டம் அவிநாசி ஒன்றியத்தில் அய்யம்பாளையம், பொங்கலுாரில் உள்ள 2 ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் நடப்புக் கல்வி ஆண்டில் ஒரு மாணவா்கூடசேரவில்லை.

இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒரு மாணவா் கூட சேராத பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை துரிதப்படுத்த கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாததால் 9 பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவா் எண்ணிக்கை குறைந்துள்ள பள்ளிகளைச் சுற்றி குடியிருப்புகள் மிகக் குறைவாக உள்ளன. திருப்பூா் பகுதியில் வசித்த குடும்பங்களில் பலா் கல்வியை முடித்துவிட்டு வெளியூா் சென்றுவிட்டனா்.

கிராமப்புறத்திலுள்ள சில பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. பள்ளிக்கு சேர வயதுடைய குழந்தைகள் இல்லாததால் சோ்க்கை குறைந்துள்ளது. பள்ளி கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி மாணவா் சோ்க்கையை அதிகரிக்க விழிப்புணா்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.