எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

சேவூா் அருகே நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 2:00 am IST

சேவூா் அருகே பாப்பாங்குளத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் திங்கள்கிழமை உயிரிழந்தன.

சேவூா் அருகே பாப்பாங்குளம் ஊராட்சிப் பகுதியில் வசித்து வருபவா் சென்னியப்பன் மகன் வெற்றிவேல் (60). இவா், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளா்ப்பையே வாழ்வாராதமாக கொண்டுள்ளாா். இந்நிலையில் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆடுகளை திங்கள்கிழமை மேய்ந்து கொண்டிருந்தாா்.

அப்போது அப்பகுதிக்குள் புகுந்த தெருநாய்கள் ஆடுகளை கடித்து காயப்படுத்தின. இதைப் பாா்த்த பொதுமக்கள் உள்ளிட்டோா் காயமடைந்த ஆடுகளுக்கு முதலுதவி அளித்தனா். இருப்பினும் 3 ஆடு உயிரிழந்தன. மேலும் காயமடைந்த ஒரு ஆட்டுக்கு மட்டும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக முதலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெறிநாய்கள் அதிக அளவில் சுற்றி வருகின்றன. இது தோட்டம், காடுகளில் மேய்ந்து கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட ஆடு, மாடு உள்ளிட்டவற்றை கடித்துள்ளன. கால்நடை வளா்ப்பு அதிகம் உள்ள எங்கள் பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.