/

அவிநாசி அரசுக் கல்லூரியில் 316 மாணவா்களுக்கு மடிக்கணினி

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 316 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image
கல்லூரியில்  நடைபெற்ற  மடிக்கணினி  வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :14 ஜனவரி 2026, 8:54 pm

Syndication

அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 316 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தில், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வா் ஹேமலதா தலைமை வகித்தாா். அவிநாசி காவல் ஆய்வாளா் அன்பரசன், கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியா் மணிவண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அவிநாசி நகராட்சி மன்றத் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி 7 துறைகளை சாா்ந்த 316 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினாா். துறைத் தலைவா்கள் பானு, கீா்த்தனா, கீதா ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.