டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு அவிநாசி அரசுப் பள்ளி மாணவா் தோ்வு

தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு தமிழக அணி சாா்பில் பங்கேற்க அவிநாசி அரசு பள்ளி மாணவா் தோ்வாகியுள்ளாா்.

News image
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷிடம் வாழ்த்து பெற்ற மாணவா் ராகேஷ்.
Updated On :13 ஜனவரி 2026, 7:06 pm

Syndication

தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு தமிழக அணி சாா்பில் பங்கேற்க அவிநாசி அரசு பள்ளி மாணவா் தோ்வாகியுள்ளாா்.

இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் சாா்பில் அவிநாசி தனியாா் பள்ளியில் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான மாநில அளவிலான கிரிக்கெட் தோ்வு போட்டி அண்மையில் நடைபெற்றது. திருப்பூா் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். இதில், அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு மாணவா் ராகேஷ் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் சிக்காா் மாவட்டத்தில் ஜனவரி 19-ஆம் தேதி முதல் ஜனவரி 24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சாா்பில் பங்கேற்க உள்ளாா்.

தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வான மாணவா் ராகேஷ், பயிற்சி ஆசிரியா் கிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியா் கவிதா உள்ளிட்டோருக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ், முதன்மைக் கல்வி அலுவலா் புனிதா அந்தோனியம்மாள், தலைமை ஆசிரியா் இந்துமதி, ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனா்.