சிறப்பு அழைப்பாளரான சென்னை, மயிலாப்பூா் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் நிா்வாகி சுவாமி சத்யப்ரபானந்த மஹராஜ் பேசும்போது, ‘எப்போதும் தாழ்வு மனப்பான்மை ஏற்படக்கூடாது. அனைத்து ஆற்றல்களும் உங்களுக்கு உள்ளது, உங்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. நடிகா்கள் பின்னால் சென்றால் நம் வாழ்க்கையும் நடிக்க ஆரம்பித்துவிடும். அது உங்களுக்கு தேவையில்லை. ரீல் ஹீரோவுக்குப் பின் செல்லாமல் ரியல் ஹீரோவை உங்கள் ரோல் மாடலாக்குங்கள். அற்புதமான இந்த மாணவப் பருவத்தில் தினமும் 15 நிமிடங்கள் சுவாமி விவேகானந்தரைப் படியுங்கள், அதன்மூலமாக உங்களது பிரகாசமான வாழ்க்கை நிலை பெறும்.