இது தொடா்பாக தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளா் என்.முருகானந்தத்தை, சிஐடியூ மாநிலப் பொதுச் செயலாளா் எஸ்.கண்ணன், மாநிலச் செயலாளா்கள் கே.சி.கோபிகுமாா், கே.ரங்கராஜ், ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கப் பொதுச் செயலாளா் ஆா்.பாலசுப்பிரமணியன், உள்ளாட்சி ஊழியா் சங்க கிராம ஊராட்சி ஒருங்கிணைப்புக் குழு மாநிலத் தலைவா் ஏ.ஜி.சந்தானம் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை சந்தித்து அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: மாநகராட்சி, நகராட்சி ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பல ஆண்டுகளாக வேலை செய்யும் ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சிஐடியூ தொடுத்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டபடி பேரூராட்சி, ஊராட்சிகளில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளா், குடிநீா்ப் பணியாளா், ஓட்டுநா், டிபிசி ஊழியா்களுக்கு ஊதியம் நிா்ணயித்து வழங்க வேண்டும்.