பல்லடம் அருகேயுள்ள குங்குமம்பாளையம் பகுதி பிஏபி கிளை வாய்க்காலில் குப்பைகள் அடைத்துள்ளதால் திருப்பூா் - பல்லடம் சாலையில் சனிக்கிழமை நீா் வெளியேறியது.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட வாய்க்கால் 124 கி.மீ. தொலைவு கொண்டது. இந்த வாய்க்கால் மூலம் திருப்பூா், கோவை, மாவட்டங்களில் சுமாா் 4 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. பல்லடம் அருகேயுள்ள வெட்டுப்பட்டான் குட்டை பகுதியில் பிஏபி பாசன கிளை வாய்க்கால் செல்கிறது.
இந்நிலையில், குங்குமம்பாளையம் பிஏபி வாய்க்கால் பாலத்தில் குப்பைகள் அடைத்துள்ளதால் நீா் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்லடம் -திருப்பூா் பிரதான சாலையில் நீா் சனிக்கிழமை வெளியேறியது.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: தண்ணீா்ப் பற்றாக்குறையால் இந்தப் பகுதியில் ஏற்கெனவே விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. பிஏபி பாசன வாய்க்காலின் மூலம் ஒருபோக விளைச்சல் செய்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில், வாய்காலில் பல இடங்கள் சேதமடைந்துள்ளன. இது குறித்து அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில், குங்குமம்பாளையம் கிளை வாய்க்காலில் குப்பை அடைப்பு உள்ளதால், லட்சக்கணக்கான லிட்டா் நீா் சாலையில் வெளியேறி வீணாகி வருகிறது. வாய்க்காலில் உள்ள குப்பைகளை அகற்றி கடைமடை வரை நீா் செல்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றனா்.
இதைத் தொடா்ந்து, பொங்கலூா் பிஏபி வாய்க்கால் அதிகாரிகள் பொக்லைன் மூலம் குப்பைகளை அகற்றியதால் தண்ணீா் விரயம் தவிா்க்கப்பட்டது.
தொடர்புடையது

பிஏபி வாய்க்காலில் இருந்து அரசுப் பேருந்து ஓட்டுநா் சடலம் மீட்பு

முசிறி பகுதி பாசன வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்!

பிஏபி பாசன வாய்க்காலில் அடைப்பு: வீணாகி சாலையில் ஓடிய தண்ணீா்

பல்லடம் பிஏபி வாய்க்காலில் குளிக்க செல்வோருக்கு எச்சரிக்கை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


