தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

திருத்தம்பல்லடம் அருகே சாலை விரிவாக்கப் பணி: அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்

பல்லடம் அருகே வெங்கிட்டாபுரம் - காமநாயக்கன்பாளையம் சாலை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா்

News image

வெங்கிட்டாபுரம் - காமநாயக்கன்பாளையம் சாலை விரிவாக்கப் பணியை தொடங்கிவைத்த அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன்,என்.கயல்விழி செல்வராஜ்.

Updated On :24 பிப்ரவரி 2026, 8:03 pm

பல்லடம் அருகே வெங்கிட்டாபுரம் - காமநாயக்கன்பாளையம் சாலை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா்

என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தனா்.

பல்லடம் - பொள்ளாச்சி பிரதான சாலையில் வெங்கிட்டாபுரம் முதல் காமநாயக்கன்பாளையம் வரை 7 கிலோ மீட்டா் தொலைவுக்கு முதல்வா் சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.45 கோடி மதிப்பில் தற்போதுள்ள இருவழிச்சாலை, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட உள்ளது.

இந்தப் பணியை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கிவைத்தனா். மேலும் பல்லடம் அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடி மதிப்பில் மகப்பேறு பிரிவு கட்டடம் கட்டும் பணியும் தொடங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத் தலைவா் பத்மநாபன், பல்லடம் நகராட்சித் தலைவா் கவிதாமணி, பல்லடம் நகர திமுக செயலாளா் ராஜேந்திரகுமாா், பொங்கலூா் ஒன்றியச் செயலாளா் பாலுசாமி, நகராட்சி ஆணையா் அருள், பல்லடம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ராமசாமி, நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் விஸ்வநாதன், திருப்பூா் கோட்டப் பொறியாளா் ரத்தினசாமி, பல்லடம் உதவிக்கோட்டப் பொறியாளா் செந்தில் அரசு, பல்லடம் உதவிப்பொறியாளா் ஜான்சி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.