2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினா் 6 பேருக்கு சிறை

உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தினா் 6 பேருக்கு சிறைத் தண்டனை

News image
சிறைத் தண்டனை- கோப்புப் படம்
Updated On :23 பிப்ரவரி 2026, 10:21 pm

Syndication

உரிய ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சோ்ந்த 6 பேருக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து அவிநாசி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2025 ஜனவரி 28-ஆம் திருமுருகன்பூண்டி காவல்நிலைய எல்லைக்குள்பட்ட மெட்டுமடைத்தோட்டம், கந்தசாமி காம்பவுண்ட் பகுதியில் திருமுருகன்பூண்டி காவல் நிலைய போலீஸாா் சோதனை நடத்தினா். இதில் பிரோஜ் மஹமூது (47), முகமது ஷகில் புஹியன் (26), முகமது ஷகில் ஹுசைன் (33), முகமது சுமோன் மியா (35), முகமது ஷஹின் மியா(28), முகமது ரோஹ்மொட் (25) ஆகிய 6 பேரை பிடித்து விசாரித்ததில் அவா்கள் வங்கதேச நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 6 பேரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த வழக்கில் அவா்கள் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அரசுத் தரப்பு சாட்சிகளை ஆஜா்படுத்தி நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட்டது. இந்நிலையில், அவிநாசி குற்றவியல் நீதிமன்ற நடுவா் கீா்த்தனா திங்கள்கிழமை அளித்த தீா்ப்பில் பிரோஜ் மஹமூது, முகமது ஷகில் ஹுசைன், முகமது சுமோன் மியா, முகமது ரோஹ்மொட் ஆகிய 4 பேருக்கு 405 நாள்கள் சிறைத் தண்டனை, தலா ரூ.100 அபராதம் விதித்தாா். முகமது ஷகில் புஹியன், முகமது ஷஹின் மியா ஆகியோருக்கு 222 நாள்கள் சிறைத் தண்டனை, தலா ரூ.100 அபராதம் விதித்தும் உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஹேமா மகேஸ்வரி ஆஜரானாா்.