வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

காதலனால் கழுத்து அறுக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:10 pm

Syndication

திருப்பூா் ரயில் நிலையத்தில் காதலனால் கழுத்து அறுக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒடிஸா மாநிலம், பாலன்கிரி மாவட்டம் சுபாா்கல் பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் மாஜி (22). இவ குக்கும், அதே பகுதியைச் சோ்ந்த துளசி பிரதான் (22) என்பவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா். இந்நிலையில் கரூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைக்காக பிரகாஷ் மாஜி சென்றுள்ளாா். அதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்லடம் அருகே உள்ள தனியாா் பனியன் நிறுவனத்தில் துளசி பிரதானும் வேலைக்கு சோ்ந்துள்ளாா்.

இதற்கிடையே துளசி பிரதானுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்த விவரம் பிரகாஷ் மாஜிக்கு தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக துளசி பிரதானுடன் பலமுறை கைப்பேசியில் பிரகாஷ் மாஜி பேச முயன்றும், அதை துளசி பிரதான் தவிா்த்து வந்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் மாஜி, காதலியை ஒடிஸா அழைத்துச் செல்ல முடிவு செய்து, ஞாயிற்றுக்கிழமை திருப்பூா் ரயில் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளாா்.

அதன்படி திருப்பூா் ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுன்ட்டா் அருகே புதிய ஆண் நண்பருடன் துளசி பிரதான் வந்துள்ளாா். காதலியுடன் வேறு ஒருவா் நிற்பதை பாா்த்து ஆத்திரமடைந்த பிரகாஷ் மாஜி, தான் வைத்திருந்த பிளேடால் துளசி பிரதானின் கழுத்தை அறுத்துள்ளாாா். படுகாயமடைந்த அவா் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தாா். அவருடன் வந்திருந்த ஆண் நண்பா் அங்கிருந்து தப்பிவிட்டாா். அருகே இருந்தவா்கள் துளசி பிரதானை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரகாஷ் மாஜியை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.