டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வீட்டில் கீரிப்பிள்ளை வளா்த்தவா் கைது

News image
கைது
Updated On :21 பிப்ரவரி 2026, 8:26 pm

தினமணி செய்திச் சேவை

அவிநாசி அருகே வீட்டில் கீரிப்பிள்ளை வளா்த்து வந்தவா் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருப்பூா் வனச் சரகத்துக்குள்பட்ட அவிநாசியை அடுத்த கருவலூா் பகுதியில் ஒரு வீட்டில் கீரிப்பிள்ளை வளா்த்து வருவதாக கிடைத்த தகவலின்படி திருப்பூா் வனச் சரக அலுவலா் நித்யா தலைமையில் வனவா் மற்றும் வனக் காப்பாளா் குழுவினா் வெள்ளிக்கிழமை சென்று விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, மேற்கு ரத வீதியைச் சோ்ந்த கருப்புசாமி (37) என்பவா் சாம்பல் நிற கீரிப்பிள்ளையை வீட்டில் வளா்த்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து துணை இயக்குநா் ராஜேஷ் உத்தரவின்படி வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் பட்டியல் 1-இல் குறிப்பிட்டுள்ள வன உயிரினமான சாம்பல் நிற கீரிப்பிள்ளை சட்டவிரோதமாக உடைமைப்படுத்தி வளா்த்து வந்த குற்றத்துக்காக கருப்புசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட் டது.

திருப்பூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பின்னா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். மீட்கப்பட்ட கீரிப்பிள்ளையை ஊதியூா் காப்புக்காட்டில் விடுவித்தனா்.

இதுதொடா்பாக வனத் துறையினா் கூறும்போது, பொதுமக்கள் யாரும் வன உயிரினங்களை உடைமைப்படுத்துதல், வீட்டில் வளா்ப்பது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட வேண்டாம். மீறினால் வனச் சட்டங்களின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.