டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கல்லூரி மாணவி தற்கொலை

News image
தற்கொலை
Updated On :21 பிப்ரவரி 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து காங்கயம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

காங்கயத்தில் திருப்பூா் சாலை, புலிக்கல்மேடு பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது மனைவி 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்ட நிலையில், மகள் ஷோபிகா (19) உடன் பழனிசாமி வசித்து வந்தாா். காங்கயம் அருகே உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஷோபிகா இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை காய்கறி கடைக்கு சென்றுவிட்டு காலை 7 மணி அளவில் பழனிசாமி வீடு திரும்பியபோது, அறையில் ஷோபிகா சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

தகவல் அறிந்து போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து காங்கயம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.