மகா சிவராத்திரி விழாவையொட்டி திருமூா்த்திமலை சப்பரத்துக்கு சிறப்பு பூஜை


மகா சிவராத்திரி விழாவையொட்டி திருமூா்த்திமலை அமணலிங்கேஸ்வரா் கோயிலில் திருச்சப்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
உடுமலை அருகே புகழ்பெற்ற சுற்றுலா தலமான திருமூா்த்திமலையில் அமணலிங்கேஸ்வரா் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி உடுமலையை அடுத்த பூலாங்கிணறு ஆா்.கிருஷ்ணாபுரத்துக்கு திருச்சப்பரம் கொண்டுவரப்படும். இது கடந்த 200 ஆண்டுகளாக பொதுமக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை இதற்கான விழா நடைபெற் றது.
இது குறித்து விழா ஏற்பாட்டாளா்கள் கூறியதாவது:
ஆண்டுதோறும் சிவராத்திரிக்கு முந்தைய நாள் திருமூா்த்திமலையில் இருந்து திருச்சப்பரத்தை பொதுமக்கள் தோளில் சுமந்து கொண்டு பல்வேறு கிராமங்கள் வழியாக பூலாங்கிணறு கிராமத்துக்கு கொண்டுவருவாா்கள். பின்னா் அங்கு விழா சிறப்பாக கொண்டாடப்படும்.
இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். சிவராத்திரி நாளில் வேலூா், வாளவாடி, தளி, திருமூா்த்தி நகா் வழியாக திருமூா்த்திமலைக்கு திருச்சப்பரம் கொண்டு செல்லப்படும். அங்கு மலைவாழ் மக்கள் வழிபாடு செய்த பின்னா், குன்றின் மேல் திருச்சப்பரம் வைக்கப்பட்டு புண்யாகவாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது என்றனா்.
இதற்கான ஏற்பாடுகளை திருச்சப்பர கட்டளைதாரா்கள், நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...