டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மகா சிவராத்திரி - பிரதமர் மோடி வாழ்த்து!

சிவபெருமானின் ஆசியால் நமது பாரதம் செழிப்பின் உச்சத்தில் அரியணையிட்டு நிலைத்திருக்கட்டும் - பிரதமர் மோடி

News image
- ANI
Updated On :15 பிப்ரவரி 2026, 5:33 am

இணையதளச் செய்திப் பிரிவு

மகா சிவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை (பிப். 15) உலகெங்கிலுமுள்ள ஹிந்து பக்தர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகமெங்கிலும் சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 15) நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. திங்கள்கிழமை (பிப். 16) அதிகாலை சிவராத்திரி விழா நிறைவடைகிறது. இதையடுத்து, தமிழகமெங்கிலும் சிவன் கோயில்களில் ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பக்தர்கள் அனைவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியை தமது எக்ஸ் தளப் பக்கம் வழியாகப் பகிர்ந்துள்ளார்.

அவர் இன்று காலை வெளியிட்டுள்ள பதிவில், ‘நாடெங்கிலுமுள்ள எமது அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும் மகா சிவராத்திரி நாள் வாழ்த்துகள். ஒவ்வொருவர் மீதும் மகாதேவர் தமது கருணைப் பார்வையைச் செலுத்தட்டும் என்பதே எமது பிரார்த்தனையாக அமைந்திருக்கிறது. சிவபெருமானின் ஆசியால் நமது பாரதம் செழிப்பின் உச்சத்தில் அரியணையிட்டு நிலைத்திருக்கட்டும்’ என்று வாழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.