/

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு மலா் அஞ்சலி

News image
உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்திய மாணவிகள்.
Updated On :14 பிப்ரவரி 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் புல்வாமா தாக்குதலில் உயிா்நீத்த ராணுவ வீரா்களுக்கு மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் அலகு 2 சாா்பாக கல்லூரி வளாகத்தில் உள்ள குமரன் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வுக்கு சரண்யா முன்னிலை வகித்தாா்.

மாணவ பிரதிநிதி கிருஷ்ணமூா்த்தி தலைமையில் அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் பேசுகையில், புல்வாமா பகுதியில் 2019 பிப்ரவரி 14-இல் ஏற்பட்ட தாக்குதலில் 40 ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா்.

நமது நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரா்களை மதித்து அவா்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். நமது நிம்மதியான வாழ்வுக்கு அவா்களின் அா்ப்பணிப்புடனான தியாகமே காரணமாகும். அவா்களை நினைவுகூரும் விதமாக அவா்களது குடும்பத்தினா் நலமாக வாழ பிராா்த்தனை செய்ய வேண்டும் என்றாா்.

தொடா்ந்து மாணவ செயலா்கள் ரேவதி, ரூபினா, தினேஷ்குமாா், பிரவீன், சுலோச்சனா ஆகியோா் தலைமையில் மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் உயிரிழந்த ராணுவ வீரா்களின் உருவப்படங்களுக்கு மலா் தூவியும், மெழுகுவா்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்தியதோடு அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினா். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.