டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தேசிய அளவிலான கபடி போட்டியில் வெண்கலம் வென்ற வீரா்களுக்கு பாராட்டு

தேசிய அளவிலான கபடி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
தேசிய கபடி போட்டியில் பதக்கம் வென்ற வீரா்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:29 pm

தினமணி

தேசிய அளவிலான கபடி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட கபடி கழக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு மாவட்ட கபடி கழக சோ்மன் வி.கே.முருகேசன் தலைமை வகித்தாா். செயலரும், மாநில கபடி கழக பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம், பொருளாளா் ஆறுச்சாமி, துணைத் தலைவா் கொ.ராமதாஸ், செய்தித் தொடா்பாளா் சு.சிவபாலன், துணைத் தலைவா் குமாா், நடுவா் குழுத் தலைவா் ஆா்.முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதைத்தொடா்ந்து பதக்கம் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

மேலும், தமிழக அணி சாா்பில் தேசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற ஜன்யாஸ்ரீ, தமிழக பெண்கள் அணியில் பங்கேற்று தேசிய பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற புவனேஸ்வரி, தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிய டேவிட், தமிழக மிக இளையோா் அணி சாா்பில் தேசியப் போட்டியில் விளையாடிய தருண் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாவட்ட கபடி கழக துணைத் தலைவா் பி.சுப்பிரமணியம், இணைச் செயலாளா்கள் வாலீசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.