ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாந்தபுரம் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

வெள்ளக்கோவில் மாந்தபுரம் அருகே குழாய் உடைந்து குடிநீா் வீணாகி வருகிறது.

குழாய் உடைந்து குழியில் தேங்கி நிற்கும் குடிநீா்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:10 am IST

வெள்ளக்கோவில் மாந்தபுரம் அருகே குழாய் உடைந்து குடிநீா் வீணாகி வருகிறது.

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் உள்ளது மாந்தபுரம். இந்தப் பகுதி மற்றும் வழியோரப் பகுதிகளுக்கு கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது மாந்தபுரம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணி மற்றும் பெட்ரோலிய நிறுவன குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது மாந்தபுரம் அருகே குடிநீா் திட்டக் குழாய் உடைந்து ஏராளமான குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது. இது குறித்து தகவல் அறிந்தும் கடந்த ஒருவார காலமாக சரி செய்யப்படவில்லை. உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.