வெள்ளக்கோவில் மின்வாரிய அலுவலக கட்டண மையத்தில் கணினி பழுதால் கட்டணம் செலுத்த முடியாக நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் இருந்து வள்ளியிரச்சல் செல்லும் வழியில் தமிழ்நாடு மின்சார வாரிய கட்டணம் செலுத்தும் மையம் உள்ளது. அதில் 4 பிரிவு மையங்களில் தனித்தனி கணினிகள் உள்ளன. அவற்றுக்கு இணைய இணைப்பு வழங்கும் பகுதி, மின்சார கோளாறு காரணமாக கருகி சேதமடைந்தது. இதுவரை சரிசெய்யப்படாததால் கடந்த ஒரு வாரமாக மின் கட்டணம் செலுத்த முடியவில்லை. பலரும் மையத்துக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனா். அபராதத்தை தவிா்க்க விரைவில் பழுதை சரி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









