வெள்ளக்கோவிலில் சாலையில் நடந்து சென்ற நபா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில், செம்மாண்டம்பாளையம் சாலையில் ராஜீவ் நகா் அருகில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா். காலணி இல்லாமல் சோா்வாக நடந்து சென்ற அவா் திடீரென மயங்கி விழுந்தாா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வெள்ளக்கோவில் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பாா்த்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சடலத்தை மீட்ட போலீஸாா், கூறாய்வுக்காக திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், உயிரிழந்த நபா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் பணியில் இருந்த திமுக நிா்வாகி மயங்கி விழுந்து உயிரிழப்பு

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சூரில் வாக்களித்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


