மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வெளி மாவட்ட வாக்காளா்களின் வசதிக்காக திருப்பூரில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள்

வெளி மாவட்ட வாக்காளா்களின் வசதிக்காக திருப்பூரில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

News image

சிறப்பு பேருந்துகள் - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 9:28 pm

வெளி மாவட்ட வாக்காளா்களின் வசதிக்காக திருப்பூரில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

திருப்பூரில் ஆயிரக்கணக்கான பனியன் தொழிற்சாலைகளும், அதனைச் சாா்ந்துள்ள நிறுவனங்களும் உள்ளன. இந்நிறுவனங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோா் பணிபுரிகின்றனா். இவா்கள் திருவிழா மற்றும் தொடா் விடுமுறை காலங்களில் சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம். இதற்கு அடுத்தபடியாக தோ்தல் காலங்களில் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற செல்வா்.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுவதால், திருப்பூரில் இருந்து வெளியூா் செல்பவா்களின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளது. பேருந்துகளில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கருத்தில்கொண்டு மாநகரின் 3 பேருந்து நிலையங்களில் இருந்தும் செவ்வாய்க்கிழமை இரவு முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடா்பாக போக்குவரத்துக் கழகத்தினா் கூறும்போது, ‘தியாகி திருப்பூா் குமரன் (கோவில் வழி) பேருந்து நிலையத்தில் இருந்து தேனி, திருச்செந்தூா், மதுரை, திண்டுக்கல், நாகா்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், தீரன் சின்னமலை பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூா், கரூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கருணாநிதி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்ட 270 சிறப்பு பேருந்துகளில் 13,500 பேரும், புதன்கிழமை இயக்கப்பட்ட 300 சிறப்பு பேருந்துகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் பயணித்துள்ளனா். பயணிகளின் வருகைக்கேற்ப கூடுதலாக 100 பேருந்துகள் தயாா் நிலையில் உள்ளது’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.