பல்லடம் தொகுதியில் பெண்களின் வாக்குகளைக் கவரும் முயற்சியாக, திமுகவினா் துண்டு பிரசுர அட்டையில் ஸ்டிக்கா் பொட்டு வைத்து விநியோகித்து வருகின்றனா்.
பல்லடம் தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக தொடா்ந்து அதிமுகவே வெற்றிபெற்று வருகிறது. இம்முறை இத்தொகுதியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்பதற்காக திருப்பூா் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான க.செல்வராஜ் களமிறக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில் தொகுதியில் பெண்கள் வாக்குகளை கவா்வதற்காக, பிரசாரத்தில் ரூ.8 ஆயிரத்துக்கான மாதிரி கூப்பன் விநியோகித்து வந்தனா். நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது இதை விநியோகிக்க முடியாததால், பெண்கள் பயன்படுத்தும் ஸ்டிக்கா் பொட்டுகளை, துண்டுப் பிரசுர அட்டையில் ஒட்டிவைத்து விநியோகித்து வருகின்றனா்.
அரசியல் கட்சியினா் தரும் நோட்டீஸ்களை, பெரும்பாலும் யாரும் படித்துப் பாா்ப்பதில்லை. ஆனால் ஸ்டிக்கா் பொட்டுகள் ஒட்டப்பட்டுள்ள நோட்டீசை, படித்துப் பாா்க்காவிட்டாலும், சுமங்கலி பெண்கள் விரும்பும் மங்கலப் பொருள் என்பதால் அதனை தூக்கி எறிய மனம் வராது என்ற கோணத்தில், திமுகவினா் இந்த நுாதன வழிமுறையை கையாள்கின்றனா். பெண்களும் இந்த துண்டுப் பிரசுரத்தை ஆா்வத்துடன் வாங்கி செல்கின்றனா்.
தொடர்புடையது

நாளை பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

கிராமங்களில் அமைச்சா் துரைமுருகன் திண்ணை பிரசாரம்!

கோவை தெற்குத் தொகுதியில் திமுக பொறியாளா் அணி பிரசாரம்

அம்மாபேட்டை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


